இது என்றோ எடுத்த என் தீர்மானம்....
இனி கவிதைகளை
காகிதங்களில் எழுதுவதில்லை என்று...!
கனவுகளில் கொஞ்சம்
காற்றில் கொஞ்சமாய்
காதலுடன் எழுதி வைப்பேன்....
என்றேனும் ஒருநாள்
உன் சுகமான நித்திரையில்
உன் சுவாசப்பைகளை
சுகமாய் நிறைக்குமென்று....
ஆனால் இன்று.....
அன்பின் இறவாமையை
இதயதிரையில் தீட்டவேண்டிய
என் எழுதுகோல் நுனி...,
கவியெழுத தேடுகிறது
காகிதமொன்றை....!
Prabhu.... Irukkiya..?
ReplyDelete